திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வரும் சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்த கவிதையை தினமணி (5.8.2012) அன்று தமிழ் மணி பகுதியில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த கவிதை. கவிஞர் சுவாதி முகில் அவர்களின் சம்மதத்துடன் என் வலைப்பூவில் இடுகிறேன்.
திணைப்பெயர்ச்சி
டோல்கேட்..ஃப்ளை ஓவர்…
ஃபோர் லான்..சர்வீஸ் ரோட்…
மோட்டல்… பெட்ரோல் பங்க்…
என்று விரல் விட்டு
எண்ணிக்கொண்டே
வருகிறாள் ஹேமா
நெல்லு வயல்… வாழத்தோப்பு…
கம்மாயி…வெத்தலை கொடிக்கால்…
செவ்வந்தித் தோட்டம், கமலைக்கிணறு…
என்று சிறு வயதில்
என் விரல் வழி எண்ணிக்கையில்
கடந்து சென்ற
அதே சாலைவழி பயணத்தில்…