நண்பர் பெரியசாமி சமீபத்தில் எழுதிய ஒரு கவிதையை முகநூலில் பங்கிட்டிருந்தார். மிக அழகான ஒரு கவிதை. படித்துப் பாருங்களேன்.
எஞ்சியவை
பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச்செல்ல
மீந்ததை பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை
கழுவத் துவங்கினேன்
கையிலிருந்த பிசுபிசுப்பை…