அலுவலக அறை

ஓரங்குல இடைவெளியின்றி

நெருக்கமான வேலை நிலையங்கள்.

பணி முன்னேற்றம் தந்து

என்னை மட்டும்

அறைக்குள் தள்ளியிருந்தார்கள்.

நான்கிற்கு நான்கு

அறைக்குள்

சிறைப்பட்டது போல்

தனியே இருந்தேன்.

மூடிய ஜன்னலில்

பொருத்தப்பட்ட

ஏர்-கண்டிஷனர்

இயங்கவில்லை.

ஈர வியர்வையுடன்

தரைக்கம்பளம், நாற்காலியின்

உறைகள் – இவற்றின்

வாசம் சேர்ந்து குடலைக்குழப்பின.

என் கணிணியில்

திரைக்காப்பு படமொன்று தோன்றியது.

கரும்பச்சை, இளம்பச்சை

புற்கள்

லேசான காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

தத்ரூபமான அசையும் சித்திரம்.

அப்புற்களின்

மீது மோதும்

காற்று என்னையும் ஸ்பரிசித்து

குளுமைப்படுத்துவதாய்

கற்பனை செய்து கொண்டேன்.

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.