காலவோட்டம்

ஒடிக்கொண்டிருக்கிறான்.
அவன் இலக்கு எதிர்காலம்.
அவன் சுயகற்பனையில்
கவிதைகளில் படித்ததில்
இலட்சிய கனவுகள்
கண்டவர்களின் உரைகளில்
எதிரகாலம் அழகாக
சித்தரிக்கப்பட்டிருந்தது.
எனவே தான் அவன் ஒட்டம்
எதிர்காலத்தை தேடி.
இறந்த காலத்தை தாண்டி
வந்துவிட்டதை
நினைவு மைல் கற்கள்
தெரியப்படுத்தின.
வெகுநேரம் ஓடியும்
நிகழ்காலம் முடிந்தபாடில்லை.
சலிப்பில்லாமல்
தேடி தேடி
ஓடினான்.
நிகழ்காலத்தின்
ஒரு புள்ளியிலேயே
அவன் ஓட்டம் முற்றுப்பெற்றது.