ராஜினாமா

Resignationவெளியேறும்

எண்ணம் வந்தது.

இருக்கையிலிருந்து

எழ முயலும்போது

கை கட்டப்பட்டது

பொன் விலங்கோ?

மஞ்சள் நூலோ?

பொருட்படுத்தாமல்

கையை உதறி

எழுகையில்

அழுகை சத்தம்.

போகாதே !

என்னை விட்டு போகாதே !

மேலதிகாரியின்

குரலென அறிவதற்கு

கொஞ்ச நேரம் பிடித்தது.

எங்களை விட்டு போகாதே

இது அதிகாரியின் அதிகாரி.

சபாஷ்!

எல்லாருக்கும்

நான் எழும் சத்தம் கூட

தெளிவாக கேட்கிறது.

என் குரல் பழையபடி

கேட்க முடியாதவாறு

இவர்கள் செவிகள்

மீண்டும் பழுதுபடுமுன்

இங்கிருந்து விலகுதல் சிறந்தது.