கண்ணை தேடினான்
எங்கு தேடியும் பார்வையில் படவில்லை.
காது கேட்கிறதா?
ஓடாத வானொலியில் சத்தம் வரவில்லை.
சுவையுணர்ச்சி தொலைந்த ஐயம்.
புளியம்பழம் தின்றான்.
இனிப்பில்லை.
மூக்கு திறமிழக்கவே
மோந்து பார்க்க முயன்றான்.
காகிதப்பூ மணக்கவில்லை.
தொடுவுணர்ச்சியை பரிசோதித்தால்
தொடுவானம் எட்டவில்லை.
உயரமான மலையில்வாழ் வைத்தியனோருவன்
ஏதோவொன்றிலிருந்து
விழிப்புணர்வை எடுத்து
அறிவுலேகியம் சேர்த்து
மருந்தாக செய்து
நோயாளியை மயக்கத்திலாழ்த்தி
வைத்தியம் செய்தான்
இப்போது பார்வை தெரிந்தாலே
கண்ணிருக்குமிடம் தெரிந்துவிடுகிறது.
வானொலியின் தலையை தட்டினால்
பாட்டும் கேட்கிறது
இனிப்புச்சுவைக்கு
புளியம்பழம் சாப்பிடுவதில்லை.
காகிதப்பூங்கோத்து குப்பைக்ககூடையில்.
மல்லிகையின் வாசம் மூக்கைப்பிளக்கிறது
தொடுவானம் தொட ஆசைவந்தால்
தொடுவுணர்ச்சியல்ல வேண்டுவது!
வைத்தியன் ஏற்றுவித்த மென்பொருள்களே போதுமானது.