சிரிக்க முடியுமான்னு பாருங்க

‎”அந்த எழுத்தாளர் எழுதறது ஒண்ணும் புரிய மாட்டேங்குதே, ஏன்?”

“Facebook-ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு எழுதப்பழகினாரு இல்லையா…அதனால..”

+++++

பஸ்ஸில் பயணி நடத்துனரிடம் : “விடுதியில் வண்டி நின்னப்போ சீட்டில் கழட்டி வச்ச செருப்ப யாரோ திருடிட்டு போயிட்டாங்க”
நடத்துனர் : “செருப்ப கழட்டிட்டு ஏன்யா பஸ்-லேர்ந்து இறங்கினிங்க?”

பயணி : “கல்யாணத்துல அடிச்ச செருப்புக்கு கைப்பையுமா கூட கெடைக்கும். கால்-ல போட்டுகிட்டுதான் செருப்பு தைக்கறவர் கிட்ட போயி வித்துட்டு வந்தேன்”

+++++

கையில் சிறு பெட்டியுடன் ரயிலில் ஏறினார் அவர். வண்டி லேசாக நகர ஆரம்பித்த பிறகுதான், தாம் தவறான ரயிலில் ஏறியிருக்கிறோம் என்பது புரிந்தது. உடனே பெட்டியை ஜன்னலிலிருந்து எரிந்து விட்டு,அவர்
படியிலிருந்து குதிக்கத் தயாரானார். அப்போது ரயிலுக்குள்ளிருந்த பிச்சைக்காரன் ஒருவன் அவரை ரயிலுக்குள்ளே இழுத்து விடுகிறான்.

பிச்சைக்காரன்: “இங்கேயே விழுந்தா உயிர் போகாதுயா..ரயில் போலீஸ் காப்பாற்றி, ஜெயிலுக்குள்ள வச்சுடும்”

பிரமுகர் மலங்க மலங்க விழித்து “பெட்டி..பெட்டி” என்று கத்தினார்.

பிச்சைக்காரன் : “யோவ்..நீ சாகவே இல்லன்னா சவபெட்டியெல்லாம் தேவைபடாதுய்யா”

பிரமுகர் : ஐயோ..பெட்டில பத்துலட்சம் ரூபா இருக்குதே”

பிச்சைக்காரன் : “தற்கொலை பண்ணிகரதுக்கு முன்னால உயில் எழுதி வச்சிட்டு வரலையா? பசங்க சண்டை போட்டுக்கபோறாங்க”

பிரமுகருக்கு மார்வலி வந்துவிட, மயக்கம் போட்டு விழுந்தார்.

பிச்சைக்காரன் : “முன்ஜாக்கிரதையான ஆளுய்யா..குதிச்சாலும்
தப்பிசுருவோம்னு தூக்க மாத்திரைய ஏற்கெனவே முழுங்கியிருக்கான்யா”

+++++

பையன் : “சேவல் கூவும், மயில் அகவும் – னு புத்தகத்துல சொல்லி
இருக்கு…ஆனா அப்பா கத்துவாரு அப்படின்னு எழுதலையே?”

அம்மா : “அப்படின்னா குரங்கு கத்தும்-னு போட்டிருக்கும் பாரு

+++++

“ஊருக்கு போகலாம்னு பஸ் பிடிக்க கெளம்பினா, பாதைல பூனை குறுக்கே போகுது சார்!..அதனாலே வீட்டுக்கே திரும்பி வந்துட்டேன்”
“அந்த பூனைக்கும் போன காரியம் ஆகலே…”
“என்ன கிண்டலா? ”
“உங்களை தாண்டி நாலடி போனதும், கிரிக்கெட் பால் பட்டு இறந்து போனதைத்தான் என் திண்ணைலர்ந்து மத்தியானம் பார்த்தேனே…சந்தைக்கு போகலாம்னு பார்த்தேன்..உங்களை பார்த்துட்டேன்…ஒங்களோட சேர்ந்தே வீட்டுக்கு திரும்பிப்போயிடறேன்”

+++++

“கொடுத்த கடன் திரும்பி வரலன்னா, என்ன பண்றது?”
“திரும்பி வந்தா என்ன பண்ணுவீங்க?”
“பணத்தை safe-ஆ வங்கி-ல போட்டுட்டு ஹாய்-யா மறந்துட வேண்டியது தான்”
“அதே மாதிரி, வராத கடனை வங்கி-ல போடாமலேயே மறந்துடுங்க…ஹாய்யா இருப்பிங்க”

+++++

2 Comments

  1. iyan says:

    mudiyalabaa mudiyala… try better… 😦

    1. hemgan says:

      hahaha…..I am not good at slapstick comedy….thought I’d try….oru murai poruthukkonga

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.